மணம்பூண்டியில் பஸ் கண்ணாடிகளை உடைத்த கண்டக்டர் மீது வழக்கு

73பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியில் இங்கே வரும் திருக்கோவிலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திருக்கோவிலூர் - சென்னை வழித்தடத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் சு. பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கார்த்திகேயன், 32; இவர் நேற்று மாலை 3: 30 மணிக்கு, குடிபோதையில் பணிமனை வளாகத்தில் இருந்த இரண்டு பஸ்களின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து கேட்ட பணிமனை மேலாளர் நாராயணமூர்த்தியை மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி