தங்க காப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணியர் அருள்பாலிப்பு

71பார்த்தது
தங்க காப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணியர் அருள்பாலிப்பு
திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆடி கிருத்திகையையொட்டி, நேற்று காலை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். மாலை 6: 00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி