ஆலுார்: பள்ளிக்கு புரஜெக்டர் வழங்கல்

69பார்த்தது
ஆலுார்: பள்ளிக்கு புரஜெக்டர் வழங்கல்
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஏதுவாக ரூ. 43, 500 மதிப்பிலான புரஜெக்டரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாணகுமார் வழங்கினார். தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மலர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நீலா முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சேவையை பாராட்டி பேசினார். தலைமை ஆசிரியர் செல்வகுமார் நல்லாசிரியர் விருதுக்காக பெற்ற ரூ. 10 ஆயிரத்தை பள்ளியின் வளர்ச்சி நிதிக்காகவும், நுழைவு வாயில் அமைக்க பள்ளி மேலாண்மை குழுவிடம் வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரன், பொறியாளர் ரசூல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆசிரியர் சங்கர்கணேஷ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி