திருக்கோவிலூர் அருகே உள்ள பாவந்தூர் மதுரா மேட்டுக்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கங்கையம்மன், அய்யப்பன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்தகோவில் கும்பாபிஷேக விழா வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. 10 மணிக்கு மேல் அஷ்டபந்தனம் சாற்றுதல் மற்றும் ரத்ன பிரதிஷ்டை - ஆகிய நிகழ்ச்சிகளும், மாலையில் அங்கு - ரார்ப்பணம், மகாசாந்திஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், இரவு மகா சாந்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பின்னர் 10-ந் - தேதி(திங்கட்கிழமை)காலை6. 30 மணிக்கு மேல் 7. 30மணிக்குள் புனிதநீர் ஊற்றப்பட்டு கோவில் கோபுரங்களுக்கும், சாமிகளுக்கும் - கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்து வருகிறார்கள்.