கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

5470பார்த்தது
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழிலன் என்ற செந்தூரப் பாண்டி மனைவி எழிலரசி (வயது 25). செந்தூரப்பாண்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடை பெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் மன வேதனையில் இருந்த எழிலரசி துக்கம் தாங்காமல் வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவர் இறந்ததுக்கம் தாங்காமல் மனமுடைந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வைரபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி