திண்டிவனம் அடுத்த ரெட்டணை குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சிவா, 29; இவர், அந்த பகுதியில் கள்ளச்சாரயம் விற்று வருகிறார்.
கடந்த மாதம் 1ம் தேதி, பெரியதச்சூர் போலீசார் ரோந்து சென்றபோது, சிவா வீட்டின் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, அவரை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், கைது செய்ய எஸ். பி. , தீபக்சிவாச் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கலெக்டர் பழனி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பெரியதச்சூர் போலீசார் நேற்று சிவாவை, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் உள்ள சிவாவிடம் அளித்தனர்.