விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விறகு அடுப்பில் வெந்நீர் வைத்த போது, எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனியின் மனைவி முத்துலட்சுமி (70). இவர் கடந்த 17-ஆம் தேதி வீட்டின் பின்புறத்தில் விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமியின் சேலையில் தீப்பற்றியதாம். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து, ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.