கண்டமங்கலம் அருகே குடிப்பழக்கம் உடையவர் உயிரிழப்பு

75பார்த்தது
கண்டமங்கலம் அருகே குடிப்பழக்கம் உடையவர் உயிரிழப்பு
கண்டமங்கலம் அடுத்த கொத்தாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சாம்சன், 26; பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி