பள்ளிக்குச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

71பார்த்தது
பள்ளிக்குச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், சிங்கநந்தல் முதல் தெருவைச் சேர்ந்த எட்டியப்பன் மகன் பிரவின் (14). இவர் வேப்பேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தார். பிரவின் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அதே கிராமத்தில் தேவராஜுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் பிரவின் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி