விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமானுஜம், 39; கொத் தனார். இவர் கடந்த 31ம் தேதி மாலை திண்டிவனம், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, ரோஷணையைச் சேர்ந்த கிடங்கலான் என்கிற சரண்ராஜ், 38; மற்றும் உடன் வந்த இரண்டு பேர், ராமானுஜத்தை இரும்பு ராடால் தாக்கி, அவரிடமிருந்து மொபைல் போன், பைக்கையும் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, கிடங்கலான் என்கிற சரண்ராஜ், அவரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 30; விஜய், 21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சந்தைமேடு பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.