வீடூர் அருகே நூதன முறையில் மது பாட்டில் கடத்திய இருவர் கைது

67பார்த்தது
வீடூர் அருகே நூதன முறையில் மது பாட்டில் கடத்திய இருவர் கைது
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வீடூர் அணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் பாத்திர வியாபாரம் மற்றும் தலைமுடி வாங்குவது போல வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில், புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு 100 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் செஞ்சியைச் சேர்ந்த ரஜினி, 35; வெங்கடேசன், 35; என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி