மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 11 மணிக்கு யாக சாலை பூஜையும், பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.