செஞ்சி அடுத்த வேலந்தாங்கள் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 73: இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கொட்டகையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார்.
கடந்த 19ஆம் தேதி காலை 3 மணிக்கு பார்த்த போது பசு மாடுகளை யாரோ திருடிச் சென்றிருந்தனர். பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.