செஞ்சி அருகே விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

69பார்த்தது
செஞ்சி அருகே விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெரியாமூர் ருக்குமணி சத்தியபாமா சமேத வேணுகோபாலசாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாக சாலை பிரவேசமும், கணபதி பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, அன்று மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 

நேற்று காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு கும்ப புறப்பாடும், 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது.

தொடர்புடைய செய்தி