குளத்தின் மதகை உயா்த்த கோரிக்கை

263பார்த்தது
குளத்தின் மதகை உயா்த்த கோரிக்கை
செஞ்சி வட்டம் அனந்தரம் பேரூராட்சியில் உள்ள செட்டி குளத்தின் மதகை உயா்த்தி புதுப்பிக்க வேண்டும் என அனந்தபுரம் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

செஞ்சி வட்டம் அனந்தபுரம் துத்திப்பட்டு சாலையில் உள்ள செட்டிக்குளம் அப்பகுதி மக்களுக்கு குடி நீா் ஆதாரமாக விளங்குகிறது. இந்த குளம் அசுத்தமாக உள்ளதால் குடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், மழைக்காலங்களில் இந்த தண்ணீா் சாலையில் செல்வதால் தடுப்பு சுவா் அமைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா். இந்நிலையில் இந்த தடுப்பு சுவா் மதகின் வழியாக நீா் அனைத்தும் வெளியே சென்று விடுகிறது.

இதனால் கோடை காலங்களில் நிலத்தடி நீா் குறைகிறது. எனவே, தண்ணீா் வெளியேறும் மதகை உயா்த்தி சீரமைத்தால் கோடை காலத்தில் தண்ணீா் குறையாமல் அதிக அளவு நீரை தேக்கி வைக்க முடியும். மேலும், குளத்தின் உள்ளே யாரும் செல்லாதவாறு இரும்பு வேலி அமைக்க வேண்டும். குளத்தின் சுற்றுச்சுவரை உயா்த்தி மதகை உயா்த்தி அமைக்க வேண்டும் என அனந்தபுரம் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி