மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

72பார்த்தது
மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
மாா்கழி மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாா்கழி மாத அமாவாசையையொட்டி, மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

பின்னா், பல்வேறு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பின்னா், உற்சவா் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று ஜகத்ஜனனி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இரவு 11. 40 மணியளவில் உற்சவா் அங்காளம்மன் வடக்கு வாசல் வழியாக மேளதாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடலை பாடினா். 

அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேங்காய், எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, அம்மன் மீண்டும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி, பெங்களூரு உள்பட பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி