செஞ்சியில் புத்தக திருவிழா; கூடுதல் கலெக்டர் துவக்கி வைப்பு

57பார்த்தது
செஞ்சியில் புத்தக திருவிழா; கூடுதல் கலெக்டர் துவக்கி வைப்பு
செஞ்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் 9 நாள் புத்தக திருவிழாவை கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சார்பில் 9 நாள் புத்தக திருவிழா சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. வரவேற்புக் குழு தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரநாராயணன், தென்னரசு, நிதிக் காப்பாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சேகர் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். 

சிவக்குமார் எம்.எல்.ஏ., பெற்றுக் கொண்டார். சி.இ.ஓ., அறிவழகன் கோளரங்கத்தை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான போட்டிகளை டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முக வடிவேல், தொடக்கக் கல்வி அலுவலர்கள் அருள், சிவசுப்பிரமணியன், மாவட்ட நூலகர் காசிம், அறிவியல் இயக்க மாநில தலைவர் திருநாவுக்கரசு, மாநில பொறுப்பாளர் சுப்ரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக் குழு செயலாளர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் சுகாதேவ் நன்றி கூறினார். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி