விழுப்புரம் மாவட்டம், வல்லம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் சங்கீதா, (40); ஊராட்சி தலைவர். இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா, (50); ஊராட்சி துணை தலைவர், இவரது கணவர் குணசேகர், (55); வார்டு உறுப்பினர் சுதா. இவரது கணவர் சரவணன், (40). இவர்கள் 4 பேரும், தன்னை தலைவர் பணியை செய்ய விடாமல் பிரச்னை செய்து, திட்டி, கொலை மிரட்டல் விடுப்பதாக செஞ்சி போலீசில் சங்கீதா புகார் அளித்தார். அதன் பேரில், இன்று (அக்.,6) போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், துணைத் தலைவர் சித்ரா உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.