பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ சண்டிகரில் இளைஞர்கள் குவிந்துள்ளனர். தன்னார்வலர்கள் தேவை என்ற அறிவிப்பை தொடர்ந்து இளைஞர்கள் குவிந்தனர். அவர்கள் கூறும் போது, “நாங்கள் ராணுவத்தை ஆதரிக்க இங்கே இருக்கிறோம். அவர்கள் எங்களுக்காக நிறைய செய்கிறார்கள். நாங்கள் ராணுவத்திற்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம். இந்தியாவுக்காக உயிரை கொடுக்கவும் தயார்" என்றனர்.