பஞ்சாபின் ஹோசியாபூரில் பாகிஸ்தானின் ஏவுகணை வந்து விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. போர் விமானமான J-10 அல்லது JF - 17ல் இருந்து இந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 100 கி.மீ தூரத்திற்கு வந்து பறந்து விழுந்த ஏவுகணையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக வயல்வெளியில் கிடக்கும் எந்தவொரு பொருளையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என பஞ்சாப் அரசு எச்சரித்தது.