மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து 5 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 10 பேர் வரை ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.