தெலங்கானா மாநிலத்தில் பைக்கில் சென்ற முதியவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் ஜூன் 03ஆம் தேதி யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கீர்த்தி வெங்கடேஸ்வர்லு (60) என்பவர் தனது பைக்கில் வடாய்குடமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ராயகிரி நோக்கி வேகமாக வந்த லாரி அவர் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.