மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி கட்சியின் மாநில நிர்வாகி ஜெகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.