வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 35), இவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் இல்லை. மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனங்களை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற கார்த்திக் (20) என்பவரை கைது செய்தனர்.