கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு!

57பார்த்தது
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு!
வேலூர் மாநகராட்சி கஸ்பா பகுதியில் 40, 41-வது வார்டுகளில் உள்ள எம். சி. ரோடு, சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் ரூ. 39 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பணிகளை தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார். இந்த பணி முடிக்கப்பட்ட பின்னர் அங்கு சாலையும் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஆய்வின் போது செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி