பணத்துடன் கைப்பையை திருடியவர் கைது!

58பார்த்தது
பணத்துடன் கைப்பையை திருடியவர் கைது!
வேலூர் அல்லாபுரம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் மாலா (61). இவர் கடந்த 27-ந் தேதி உழவர் சந்தைக்கு சென்றார். அப்போது அண்ணாநகர் 3-வது தெருவில் ஒரு கடைக்கு சென்றார். அவர் வைத்திருந்த கைப்பையை அருகில் வைத்திருந்தார். பொருட்கள் வாங்கிய பின்னர் கைப்பையை பார்த்தபோது மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது கைப்பையில் ரூ. 2 ஆயிரம், மற்றும் செல்போன் இருந்ததாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாலாவின் கைப்பையை திருடிச்சென்றது சின்னஅல்லாபுரம் பகுதியை சேர்ந்த சித்திக் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி