வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் குற்ற விசாரணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நுணுக்கங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி மற்றும் எஸ். பி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற எஸ். பி சித்தன்னன் பாரம்பரிய குற்ற விசாரணை குறித்தும் மற்றும் சைபர் குற்ற விசாரணை குறித்து ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலு சுவாமிநாதன் ஆகியோரால் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். குற்ற விசாரணையில் மேற்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள், வழக்குகளின் பிரிவுகள் பற்றி பயிற்சி வகுப்பில் பங்கேற்ற காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.