ஒடுகத்தூர் அருகே தனியார் பஸ் ஓட்டுநர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

3422பார்த்தது
ஒடுகத்தூர் அருகே தனியார் பஸ் ஓட்டுநர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தில் ஏ. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது40). இவர் வேலூரில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் மராட்டியபாளையம் பகுதியில் உள்ள விவசாயி கிணற்றில் பாலகிருஷ்ணனின் சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலையை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் 2 மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.

இதனை அடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி