வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தடுத்தல் குறித்து தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இந்த வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.