வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு குண அய்யப்ப துரை, துணைப் பதிவாளர் சுவாதி, மாவட்ட வளங்கள் அலுவலர் சுமதி மற்றும் பலரும் உடன் இருந்தனர்.