திருப்பத்தூர்: வெற்றி பெற்ற மாணவிக்கு விசிக திருமாவளவன் பாராட்டு பரிசு

67பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் சுஹாசினி(+2 மாணவி). இவர் ஆலங்காயத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் படித்து வந்தார். கடந்த 25. 03. 2025 அன்று கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத செல்வதற்காக காத்திருந்த போது அவ்வழியாக வாணியம்பாடியில் இருந்து நிலையத்திலிருந்து ஆலங்காயம் நோக்கி சென்ற அரசு நகர பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், பேருந்து பின் தொடர்ந்து ஓடி மாணவி பேருந்தில் ஏறி தேர்வுக்கு சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நேற்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் அரசு பேருந்தில் ஓடிச்சென்று ஏறிய பள்ளி மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்ற போது, வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது காரை நிறுத்தி மாணவி சுஹாசினியை நேரில் அழைத்து அவருக்கு சால்வை அணிவித்து, இனிப்பு மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவித்தார், அதனை தொடர்ந்து மாணவியிற்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி அளித்து மாணவியின் மேற்ப்படிப்பிற்கு உதவுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி