வேலூர் மாவட்ட ஆட்சியரகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (மார்ச் 24) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.