திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து பூங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது மேலும் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பலத்த காற்றின் காரணமாக பள்ளி பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து சைக்கிள் ஸ்டாண்ட் மேற்கூரை மீது சாய்ந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களே விடுமுறை உள்ளதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.