திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று இரவு பெய்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது அப்போது பள்ளி அருகே வேப்பமரம் ஒன்று சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்துள்ளது. தொடர்ந்து அந்த வேப்ப மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.