வெற்றி பெற்ற மாணவிக்கு தவெக மகளிர் அணிகள் நேரில் வாழ்த்து

79பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்


*வாணியம்பாடி அருகே பேருந்தை விரட்டிச் சென்று இயற்பியல் தேர்வு எழுதி பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்ற மாணவியின் கைகளுக்கு வெள்ளி காப்புகள் போட்டு கேடயம் வழங்கி கௌரவித்த மாவட்ட தவெக மகளிர் அணி பெண்கள்*

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் வசிக்கும் மகேந்திரன் மகள் சுகாசினி என்கிற மாணவி ஆலங்காயத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி இயற்பியல் பாடத்திற்கான பொது தேர்வு எழுத பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்பொழுது அங்கு வந்த பேருந்து நில்லாமல் சென்றதால் அந்த பேருந்தை விரட்டிச் சென்று ஏறி தேர்வு எழுதினார்.

இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் அரசு பேருந்து விரட்டிச் சென்று ஏறி பொது தேர்வை எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று அசத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேறபை பெற்ற நிலையில்.

திருப்பத்தூர் மாவட்ட தவெக மகளிர் அணி சார்பாக சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து அந்த மாணவியை கௌரவிக்கும் விதமாக கைகளுக்கு வெள்ளி காப்புகள் போட்டு ஓடி சென்று பேருந்தை பிடித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றதற்கு அடையாளமாக கேடயம் வழங்கி இனிப்புகள் கொடுத்து கௌரவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி