திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு ஒரு புதிய தார் சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.