திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் , சுண்ணாம்பு பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து மயில்கள் கூட்டம் கூட்டமாக இரை தேடி விவசாய நிலங்களுக்கு வந்து செல்கிறது. இவற்றை பார்க்க அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அங்கேயே நின்று இந்த மயில்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்.