ராணிப்பேட்டை மாவட்டம் உளியநல்லூர் கிராமத்தில் இன்று டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் நடைபெற்றது.
வருவாய் மற்றும் வேளாண் துறையினர் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உளியநல்லூர் கிராமத்தில் மொத்தம் எத்தனை ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது, இதில் எத்தனை ஏக்கரில் என்னென்ன பயிர்கள் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் கணக்கெடுப்பு செய்தனர்.