துப்பாக்கி சுடும் போட்டியில் காவலர் மூன்றாம் இடம்

54பார்த்தது
துப்பாக்கி சுடும் போட்டியில் காவலர் மூன்றாம் இடம்
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்து உள்ள தமிழ்நாடு அதிதீவிர படை பயிற்சி பள்ளி மைய துப்பாக்கிச்சூடு தளத்தில் (26/9/2024 முதல் 28/9/2024 ) வரை மாநில காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் நக்சல் சிறப்பு தடுப்பு பிரிவு முதல்நிலை காவலர் பிரபு 100-Yards Standing Rifle பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று வடக்கு மண்டலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் நக்சல் சிறப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் தனி பிரிவு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி