திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 435 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை சிவசௌந்தரவல்லி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.