திருப்பத்தூர்: தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

74பார்த்தது
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டரம்பள்ளி கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு அனைத்து பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியர் சிவ சௌத்திரவள்ளி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் தீ பிடித்தால் உடனடியாக தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து ஒத்திகை காட்சிகள் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் தர சான்றிதழ், அவசர சேவை மருத்துவ உபகரணங்கள், அவசர கால வழி, தீயணைப்பு கருவிகள் செயல்பாட்டில் உள்ளனவா? பேருந்துகளின் அனைத்து ஆவணங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா? ஓட்டுனர் நடத்துநர் உடல் ரீதியாக பாதிப்புகள் இன்றி உள்ளார்களா என பல்வேறு வகையில் பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்கும் வகையில் அனைத்து பாதுகாப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி