தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண் குவியலை அகற்ற கோரிக்கை!

52பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண் குவியலை அகற்ற கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் பூண்டி, சுமை தாங்கி, காவேரிப்பாக்கம், துரைபெரும்பாக்கம், ஈராளச்சேரி, களத்தூர், ஓச்சேரி, பெரும்புலிப் பாக்கம் சந்திப்புகள் என 8 இடங்களில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவேரிப்பாக்கம் மற்றும் ஓச்சேரி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் மேம்பால பணிகள் தொடங்கின. இதன் காரணமாக சாலையின் இரு மார்க்கத்திலும் தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், தனியார் கம்பெனி பஸ்கள், கார், லாரி, மற்றும் கனரக வாகனம் சென்று வருகிறது. இதனால் சாலையில் மணல் குவிந்துள்ளது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ள மண் குவியல்களை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி