சோளிங்கர் அடுத்த பரவத்தூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 31). இவர் ஐப்பேட்டில் உள்ள அவரது பெற்றோரை பார்த்து விட்டு வெங்கப்பட்டு சமுதா யக்கூடம் அருகே வந்தபோது, அவரை இருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லா ததால் அவரது மோட்டார்சைக்கிளை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வழக்குப்ப திவு செய்து வெங்கப்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (23), மதன் (24) ஆகிய இருவரையும் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.