கரிக்கல் அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

69பார்த்தது
கரிக்கல் அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
சோளிங்கர் அருகே கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நரசிங்கபுரத்திலிருந்து தனியார் பள்ளிவரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது இந்த தார்சாலை ஜல்லிசாலையாக மாறியுள்ளது. இந்த ஜல்லிசாலை வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் தனியார் கம்பெனியில் பணிபுரியும் பணியாளர்கள் செல்லவும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி இந்த சாலையை தார்சாலையாக அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கரிக்கல் சாலையிலிருந்து கரிக்கல், ரெண்டாடி வழியாக கிருஷ்ணாபுரம் வரை செல்லும் குறுக்குத் தார்சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் ஜல்லிசாலையாக உள்ளது. இந்த சாலையை கரிக்கல் ரெண்டாடி, கிருஷ்ணாபுரம், வீராமத்தூர் ஆகிய கிராமப் பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி