மார்க்கெட் கடைகள் பயன்பாட்டுக்கு திறப்பு!

54பார்த்தது
மார்க்கெட் கடைகள் பயன்பாட்டுக்கு திறப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 64 லட்சம் மதிப்பில் 39 கடைகள் கொண்ட தினசரி மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் ஆசிர்வாதம், தினசரி மார்க்கெட் சங்கத் தலைவர் குப்பன், துணைத் தலைவர் விநாயகம், செயலாளர் சுதாகர், துணைச் செயலாளர் மைக்கேல், பொருளாளர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். முனிரத்தினம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் டி. கோபால், எம். இ. ஆஞ்சநேயன், அன்பரசு, வழக்கறிஞர் சக்கரவர்த்தி, தி. மு. க. நகர செயலாளர் கோபி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நாகராஜ், கோவிந்தராஜ், வஜ்ரவேலு மற்றும் வியாபாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி