கலவை அருகே மேல்நெல்லி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவமணி (35), தொழிலாளி. இவர் கடந்த 3ஆம் தேதி மாடி படிக்கட்டில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.