வாலாஜாவில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கூடத்தில் புதியதாக வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5 அடி உயரம் கொண்ட மூகாம்பிகை மற்றும் வீரபத்ரர் சிலைகளுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த புதிய சிலைகள் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.