ராணிப்பேட்டை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது

52பார்த்தது
ராணிப்பேட்டை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் முகமூடியுடன் உள்ள ரவுடிகளான 2 நபர்கள் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடினர். 

அதே போல சிப்காட் வ.உ.சி. நகரில் உள்ள அரிசிக்கடை ஒன்றின் வாசலிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால், கடையின் முன்பகுதி கருகி சேதமடைந்தது. போலீஸ் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா தலைமையில், 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 4 துணை எஸ்பிக்கள் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் காத்திருந்தன. சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் (வயது 48) மற்றும் அவரது கூட்டாளிகளான ஸ்ரீதரன் (28), டோனி மெக்கலின் (23) ஆகியோர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸ் வழக்கு பதிவு செய்ததற்காக, திட்டமிட்டு போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி