கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் தாக்கத்தினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில், ராணிப்பேட்டையில் இன்று மதியம் கரு மேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.