ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்

60பார்த்தது
ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த மாதத்திற்கான கூட்டம் வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற் பொறியாளர் எஸ். விஜய குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி